பெண் என்னும் பேரின்பம்
புதுக்கவிதை
**********************************
பெண் என்னும் பேரின்பம்
**********************************
நம்பிக்கையின் நட்சத்திரமாக நாளும் பிரதிபலிப்பாக/
நாளைய பாரதத்தின் ஒளிவிளக்காக திகழந்து/
நல்லதோர் வீணை
செய்தே வாழ்வில்/
நயம்பெற உறவினைப் பேணும் பாங்குடையவளே/
அன்பின் இலக்கணம் அறிந்த திருமகளாக/
அறிவுச் சுடராய் திகழ்ந்து அர்த்தமுள்ள/
அழியா ஓவியமாக தீட்டிடும் காவியமாய்/
அரவணைத்து காக்கும் தெய்வம் பெண்ணே/
திங்கள் முகமாய் தித்திக்கும் கரும்பாய்/
திருமகளாக வந்த அவதார பொக்கிஷமாய்/
அழியாத் தமிழ் போலே
நிலைத்து/
அகிலம் காக்கும் மங்கையரை போற்றிடுவோமே/
சாதனைப் பெண்மணி
கவிஞர் முனைவர் செ.ஆயிஷா.
Comments (0)