பேசும் கலை...!
புதுக்கவிதை
பேசும் கலை
****************
ஒருவருக்கொருவர் புரியும் போதும் எதுவும் பேசத் தோன்றுவதில்லை!
ஒருவரையொருவர் பிரியும் போதும் பேசத் தோன்றுவதில்லை!
பேசத் தோன்றும் போது பேச முடிவதில்லை!
பேச முடியும்போது
பேச்சு வருவதில்லை!
பேசி முடித்த வீடுகளிலும்
பேசி முடிப்பதில்லை!
பேச முடிந்த போது சமூகம்
பேச விடுவதில்லை!
சுத்தமல்லி உமாஹரிஹரன்'
திருநெல்வேலி
Comments (0)