இன்றைய மனிதன்
புதுக்கவிதை
"இன்றைய மனிதம்"
நம் இன்பம் பிறருக்கு துன்பம் ஆகிறது!!
நம் துன்பம் பிறருக்கு! இன்பம் ஆகிறது !!
நம் வெற்றி !!
பிறரை ஆச்சரியப்படுத்துகிறது!!
நம் தோல்வி !பிறரை ஆனந்தப்பட வைக்கிறது!!
பக்கத்து வீட்டில் புகைக்காமலே! பகை வளர்கிறது!
பருவம் வந்தபோது பாசம் மறந்து வேஷம் கொள்ள செய்கிறது!
பகை மறந்து பாராட்டும் பண்பு படர வேண்டும்!!
பார்போற்ற உயர்ந்தாலும் !
பழமை மறவாத நட்பு வேண்டும்!!
நாம் வரும்போது எதையும் கொண்டு வந்ததில்லை !!
நாம் போகும்போது,, எதையும் கொண்டு போவதில்லை!!
அறுபடை ஆனாலும் அழியாத ,அளவுகோல்காணாத அன்பை விதைத்துச் செல்வோம்!!
கவிதை மாணிக்கம் !
Comments (0)