பேராத்மா எம் காந்தி..

காந்தி ஜெயந்தி கவிதை

பேராத்மா எம் காந்தி..

பேராத்மா எம் காந்தி
 

காந்தி என்ற 
ஒற்றைப் பெயரால்

உலகத்தையே வென்றாயே
உத்தம காந்தியே!!

கற்றது வழக்காடவே
காலம் முழுவதும்

நீதிக்காய் நின்றாயே
அறவழியைப் போதித்தாயே

அன்பெனும் வில்கொண்டு
அமைதியெனும் அம்பைப்பூட்டி

எய்தியதின் விளைவாலே
கிடைத்ததே சுதந்திரமும்

மக்களின் அடிமைசங்கிலியை
உடைத்தெறிந்த உத்தமரே

உன்றன் அவதாரநாளிலே
தலைவணங்கி நிற்கிறோம்

தரணியும் ஆனந்தமானதே
தன்னிகரில்லாத் தலைவர்

உன்றன் பிறப்பாலே
வாழ்கவே பேராத்மாவே!

ரம்யாமுத்துபாபு.