காதல் பரிசு..! 015
அன்புக் கவி விருது கவிதை போட்டி
இயற்கை தந்த பரிசு
இமைகள் திடீரென சந்தித்து இசைந்தது.
இன்புற்ற மனத்திற்கு இறகுகள் முளைத்தது.
இதயம் புதிதாக துடிக்க ஆரம்பித்தது.
இவ்வுலகம் அழகாய் எண்ணத்திற்கு தோன்றியது.
இனம் புரியாத மகிழ்ச்சி அடைந்தது.
இனம் , மொழி , வயது தகர்த்தெறிந்தது.
இதய அன்பை இடைவெளியின்றி ரசித்தது.
இறுதி மூச்சுவரை தொடர எதிர்பார்ப்பது.
இயற்கை தந்த அழகிய பரிசு.
இதயத்தால் இணைந்த காதல் பரிசு.
இமைகளில் தொடங்கி இதயத்தில் மயங்கியது..
இதமான அன்பு இதயத்திற்கு மருந்து .
-ந.காயத்ரி இளமுருகன்
இலவடை.
Comments (0)