அறிவு வெளிச்சம் அம்பேத்கர் 070
அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி
அறிவு வெளிச்சம் அம்பேத்கர்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையே //
இன்னல்களைத் தகர்த்தெறிந்து சாதித்திட்ட விந்தையே //
மக்களின் அறியாமையை நீக்கிய அறிஞரே //
மட்டமான மூடநம்பிக்கையை மனதிலிருந்து நீக்கியவரே //
கற்பி புரட்சிசெய் ஒன்றுசேர் என்றவரே //
கல்வியால் சாதித்து சாதனைகளைப் புரிந்தவரே //
கடின முயற்சியால் பாரிஸ்டர்பட்டம் வென்றவரே //
கல்வியினை அமெரிக்காவில் பெற்றிட்ட முதல்இந்தியரே //
ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் மூச்சே //
ஒல்காப் புகழினைத் தொட்டதுந்தன் பேச்சே //
ஆடுகளாய் இருக்கக்கூடாதென்ற அற்புத மனிதரே //
சிங்கங்களாய் வீறுகொண்டெழுவென முழங்கிய புனிதரே //
சுயமரியாதை இழப்பது அவமானம் என்றவரே //
சுயசிந்தனையோடு செயல்பட நல்வழி வகுத்தவரே //
சுப்பனுக்கும் சுப்பிரமணிக்கும் வாக்குரிமைத் தந்தவரே //
சுயநலம் சிறிதும் இல்லாத புரட்சி யாளரே //
ஆற்றலின் அடைமொழியே அறிவின் ஊற்றே //
அறிவுச் சுடரொளியே அடக்கத்தின் அடையாளமே //
எழுச்சியின் அறிமுகமே புரட்சியின் பூர்விகமே //
எல்லா மக்களுக்கும் உன்னத உடன்பிறப்பே //
மண்ணுரிமை வாங்கித் தந்த பண்பாளரே //
பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்திட்ட வித்தகரே //
இந்தியாவின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவரே //
இறுதிவரை நெஞ்சில் நிலையாய் நின்றவரே... //
-கவிஞர்.வங்கனூர்.த.சீனிவாசன் திருவள்ளூர் மாவட்டம்
Comments (0)