புரட்சியாளர் அம்பேத்கர் 057

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

புரட்சியாளர் அம்பேத்கர் 057

புரட்சியாளர் அம்பேத்கார்
  *************  *************
அரசியல்  வானிலே அவதரித்த நிலவு //
அரசியல் சட்டத்தை
அரங்கேற்றம் செய்தவர்//
ஏழைதலீத்  மக்களின்
ஓங்காரக் குரலிவர்//
நடுநிசி வேளையிலும்
விழித்திருப்பார் காரணம்
எம்மக்கள் விழிக்கவில்லை
என்றவர் அம்பேத்கர்//
ஏழைமக்கள் வாழ்விருளைப் போக்கவந்த சூரியன்//
தனக்காக உதவிய ஆசிரியரின் பெயரைத்
தன்பெயராய் வைத்திட்ட
தன்மானச் சிங்கமிவர்//
நாசிக்கிலுள்ள கோவிலுக்குள்
தாழ்த்தப்பட்டோர் நுழையும்
போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர்//
ஆடுகளைத்தான் கோவில்முன்னே
வெட்டுகின்றார்
சிங்கமல்ல//
நாமெல்லாம் ஆடாக அடங்கி இருக்கவேண்டாம்//
சிங்கமாய் சிலிர்திடுவோம்
என்றவர் அம்பேத்கார்//
வெற்றியோ தோல்வியை
புகழ்ச்சியோ இகழ்ச்சியோ
தன் கடமையைச்
செய்யென்றார்//
பாரத ரத்னா விருதினைப்
பெற்றவர்//
பாரில்உயர்ந்து நின்றவர்//
அம்பேத்கா் புகழினை நாம்
அகிலமெலாம் பரப்பிடுவோம்//

-அ. மேரிகிறிஸ்டி
மேட்டூர் அணை_1
சேலம் மாவட்டம் _ 636401.