காத்திருக்கிறேன் ஏக்கம் தந்தாய்..! 009
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி
காத்திருந்தேன் ஏக்கம் தந்தாய்!
கண்மணியே உன் நினைவால் நித்தமும்//
என் நாட்கள் நகர்கிறது நீ
இல்லாத நாட்கள் வெற்றுத்தாளாகி போனது//
உன்னைக் கண்ட என் கண்கள்//
உறங்க மறுக்கிறது நீ பேசிய //
வார்த்தைகள் செவிகளில் ஒலிக்கிறது இசையாக//
என்னவளே எங்கிருக்கிறாய் எப்போது வருவாய்//
எனக்காகக் படைக்கப்பட்டவள் நீ தானே//
உன் பிரிவால் பித்தன் ஆனேன் //
காலங்கள் கடந்தாலும் காதலி உனக்காக //
கார்மேகக் கூட்டங்களுக்காக ஏங்கும் மயில் போலக் காத்திருந்தேன் ஏக்கம் தருகிறாய்//
இர.உஷாநந்தினி சதீஷ்குமார்.
Comments (0)