என்றும் மறவா அம்பேத்கர்...! 064

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

என்றும் மறவா அம்பேத்கர்...! 064

என்றும் மறவா அம்பேத்கர் ...!

கல்வியின் சிற்பியாம்
சிந்தனையின் சிகரமாம்
ஆற்றளுக்கும் அறிவிற்கும்
பஞ்சமில்லா  தலைவராம் 

ஏழையின் ஏழ்மையிலே பங்கெடுத்து
கல்விமான்களை உருவாக்கிட்டு 
சாதனை படைத்திட்டார் 
அதனாலே ஏழையின் விடிவெள்ளி ஆகிட்டாரோ 

அறிவியல் கடந்து அரசியலில் நுழைந்து 
நற்சேவை புரிந்து
நாளும் நல்லதை விதைத்துவிட்டார்

அரசியல் சேவை தாண்டி சட்ட அமைப்புக்களை உருவாக்கிட்டு அரசியல் அமைப்பிற்கோ தந்தையாகிட்டாரே 

ஏற்றத்தாழ்வு பார்த்ததில்லை
யாரையும் ஏளனம் செய்ததில்லை
பண்பாட்டோடு 
பாக்குமாய் வாழ்ந்து காட்டியவர் 

மேன்மை பொருந்திட்ட மேதைகளுக்கல்லாம் மேதை ஆகிட்ட மாமேதை அம்பேத்கர்
இவ்வையகம் ஒளி பெருகிட அவர் செய்த சேவையை எப்படி மறவோம் நாம்?

- ஆதம்லெப்பை பாத்திமா சபானா,
இளம்கலைபட்டதாரி மாணவி,
ஓட்டமாவடி
(இலங்கை)