தியாக தீபங்கள் 023

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

தியாக தீபங்கள் 023

            தியாக தீபங்கள்  

 முன்னுரை 
 பெண்கள் என்றாலே தியாகத்தின் மறு உருவம் தானே. நம் இந்திய நாட்டுப் பெண்கள் நாம் சுதந்திரத்திற்கு ஆற்றிய நாம் சுதந்திரத்திற்கு ஆற்றிய தொண்டுகள் வார்த்தைகள் அற்றது அவர்கள் தியாக தீபங்களாய் எரிந்து உள்ளார்கள் அவர்களை பற்றி பின்வருமாறு காண்போம்.
 வேலு நாச்சியார் 


                        இந்தியாவின் முதல் சுதந்திரக் பூலித்தேவனின் குரலே. இவருக்கு பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்த கம்பீரக்குரல் வீரமங்கை வேலு நாச்சியாரின் குரலே!

ஜான்சிராணி பிறந்தது 1830. இவருக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் வேலுநாச்சியார். ஆம், இவர் பிறந்த வருடம் 1730.

ஜான்சிராணிக்கு முன்னர் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி வேலுநாச்சியார் அவர்களே என்பது புரிகிறதல்லவா!

சுதந்திரப் போராட்டம் என்பதே வடக்கிலிருந்து தொடங்கியதை போன்ற தோற்றத்தை உருவாக்கியதால் தென்னாட்டவர்களின் போராட்டங்கள் தெரியாமல் போய் விட்டது. 
     
இராணி வேலு நாச்சியார் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.வேலு நாச்சியார் இராமநாதபுரத்தின் இளவரசி மற்றும் இராமநாட்டின் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி மற்றும் ராணி சகந்திமுத்தாத்தாள் ஆகியோரின் ஒரே குழந்தை ஆவார் . நாச்சியார் போர்ப் போட்டி ஆயுதங்கள், வளரி , சிலம்பம் , குதிரையேற்றம் , வில்வித்தை போன்ற தற்காப்புக் கலைகள் உட்பட பல போர் முறைகளில் பயிற்சி பெற்றவர் . அவர் பல மொழிகளில் புலமை பெற்றவர் மற்றும் பிரெஞ்சு , ஆங்கிலம் , உருது போன்ற மொழிகளில் புலமை பெற்றிருந்தார். அவர் சிவகங்கை அரசரை மணந்தார் , அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அவரது கணவர் முத்து வடுகநாத பெரியாவுடைய தேவர் 1780 இல் காளையார்கோயிலில் EIC வீரர்களுடன் நடந்த போரில் கொல்லப்பட்டபோது , ​​அவர் மோதலில் ஈர்க்கப்பட்டார். வேலு நாச்சியார் சிவகங்கையிலிருந்து தப்பியோடி, ஹைதர் அலியின் உதவியை நாடினார். ஹைதர் அலி அவளுக்கு 5,000 வீரர்கள் மற்றும் துப்பாக்கி குண்டுகளுடன் உதவினார். ஆரம்பத்தில் ஹைதர் அலி மறுத்துவிட்டார், ஆனால் பின்னர் அவளுக்கு வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் பயிற்சியில் உதவ ஒப்புக்கொண்டார். பணக்கார வணிகர்களின் உதவியையும் நாடினார் வேலு நாச்சியார். பல நிலப்பிரபுக்கள், திப்பு சுல்தான் , மருது சகோதரர்கள் மற்றும் தாண்டவராயன் பிள்ளை ஆகியோரின் ஆதரவுடன் எட்டு வருட திட்டமிடலுக்குப் பிறகு அவர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போராடினார் .EIC அவர்களின் வெடிமருந்துகள் சிலவற்றை சேமித்து வைத்திருந்த இடத்தை வேலு நாச்சியார் கண்டுபிடித்தபோது, ​​அவரது தளபதி குயிலி வெடிமருந்து கிடங்கின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தினார், அவர் வெடிமருந்து கிடங்கிற்குள் ஓடி, வெடிமருந்துக் கிடங்கிற்குள் ஓடி, தீயை வெடிக்கச் செய்தார்.  நாச்சியார் தனது கணவரின் ராஜ்யத்தை மீண்டும் பெற்று, மேலும் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தார். 
.                                                   
கடலூர் அஞ்சலையம்மாள்
கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகரை சேர்ந்த அஞ்சலை அம்மாள், 1890-ம் ஆண்டு பிறந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். சிறு வயது முதல் சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வந்த அஞ்சலை அம்மாள், 1921-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். இதில் கலந்து கொண்டதன் மூலம், தென்னிந்தியாவில் இருந்து ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தன்னுடையது என்று இல்லாமல் தனது குடும்பத்தினருக்கு என இருந்த நிலங்களையும், வீட்டையும் விற்று, இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக பெரும் பணத்தை செலவிட்டார்.தொடர்ந்து 1927-ம் ஆண்டு நடைபெற்ற நீலன் சிலை அகற்றும் போராட்டம் என்ற போராட்டத்தில் அஞ்சலை அம்மாள் பங்கேற்றார். இந்த போராட்டத்தில் தன்னுடைய ஒன்பது வயது மகள் அம்மாக்கண்ணுவையும், இப்போராட்டத்தில் ஈடுபடுத்தி அக்குழந்தையுடன் சிறைக்குச் சென்றார். அங்கு சிறையிலேயே தன்னுடைய குழந்தையை வளர்த்தெடுத்த இவரை, அடிக்கடி காந்தி பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 1931-ம் ஆண்டு அனைத்திந்திய மகளிர் காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய இவரை, 1932-ம் ஆண்டு நடைபெற்ற வேறொரு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் இந்தப் போராட்டத்தின் காரணமாக ஆங்கிலேயே அரசு இவரை அனுமதிக்க மறுத்தது; இருப்பினும் இவர் காந்தியை சந்தித்தார். இதன் காரணமாக இவரை காந்தி, தென்னகத்தின் ராணி என்று அழைத்தார்.
ருக்மினி லட்சுமிபதி
சென்னையை சேர்ந்த ருக்குமினி லட்சுமிபதி 1892-ம் ஆண்டு பிறந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் பள்ளி படிப்பையும், கிறிஸ்துவ கல்லூரியில் இளங்கலை பட்டம் முடித்தார். தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார். பாரீசில் நடந்த சர்வதேச பெண்கள் வாக்குரிமை மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட இவர், தொடர்ந்து தேர்தலில் போட்டியிட ஆரம்பித்தார். இதில் 1934-ம் ஆண்டு சென்னை மாகாண இடைத்தேர்தலிலும், 1937-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று சட்டசபை சென்றார்தொடர்ந்து 1946-47-ம் ஆண்டு அமைச்சராகப் பணியாற்றினார். இதன் மூலம் சுதந்திர இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் அமைச்சராக பதவி வகித்தவர் என்ற பெருமையும், தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையும் பெற்றார். முன்னதாக 1930-ம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற இவர், உப்புசாத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றவர்.
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன் பட்டியை சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சிறுவயதிலயே தந்தையை இழந்து, ஏழ்மை நிலையில் இருந்தபோதும் பள்ளிக் கல்வியை சிரமத்துடன் முடித்தார். தொடர்ந்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர் மதுரையில் பட்டம் முடித்த முதல் பெண் என்ற பெருமையை பெறுகிறார். தொடர்ந்து தான் சார்ந்த சமூகம், ஏழைகளின் நலன் சார்ந்து இயங்கினார்.காந்தியக் கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இவர் சுதந்திரத்துக்காகப் போராடினார். அவரின் வழியிலேயே 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு போராடியதால் பல ஆண்டுகள் சிறையிலே கழித்தார். அதன்பின், வினோபா பாவேவின் நிலமற்றவர்களுக்கான பாதையாத்திரை போராட்டத்தில் கலந்து கொண்டு பாதயாத்திரை மேற்கொண்டர். இந்திய சுதந்திரம் பெற்ற பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என்றிருந்தவர் தன்னுடைய காதல் திருமணத்தை, இந்தியா சுதந்திரம் பெற்ற பின் 1950வது வருடத்தில் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தன் கணவனுடன் இணைந்து ஏழை மக்களின் நலன், கல்வி மற்றும் நிலமற்றவர்களின் உரிமைக்காக பெரிதும் போராடினார்.

S. N.சுந்தராம்பாள்

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டியில் 1913-ம் ஆண்டு பிறந்தார். தன்னுடைய தந்தை உள்ளூரில் மிக பெரும் பணக்காரராக இருந்தபோதும், எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். காந்தியின் சுதந்திர போராட்டத்தில் பெரும் ஈடுபாடு கொண்ட இவர், 1928ல், 15 வயதாக இருந்தபோது, மகாத்மா காந்தி, பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடுவதற்காக கட்சிக்கு நன்கொடை அளிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.சுதந்திரப் போராட்டத்தின் போது பல போராட்டங்களில் பங்கேற்ற சுந்தராம்பாள், 1941 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பிறந்த மகனுடன் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டே காந்தி 'வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை' தொடங்கினார், அந்த போராட்டத்தில் கிருஷ்ணம்பாள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான அகிம்சை ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார். இந்த போராட்டத்திலும் கைது செய்யப்பட்டு மீண்டும் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் பல போராட்டங்களை நடத்திய இவர் ஒருபோதும் சிறை செல்ல தயங்கியது இல்லை. சுதந்திரத்திற்கு பின்னும் விவசாயிகளுக்கான பல பிரச்னைகளுக்குப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அம்புஜதம்மாள்

சென்னையின் புகழ்பெற்ற வழக்கறிஞராக திகழ்ந்த ஸ்ரீனிவாச ஐயங்கரின் மகள் அம்புஜதம்மாள். தன்னுடைய பதினைந்து வயது வரை இயல்பான பணக்கார வாழ்க்கை வாழ்ந்த இவர், காந்தியையும், அவரின் மனைவி கஸ்தூரி பாவையும் நேரில் கண்டபின் எளிமையாக மாறியதுடன், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். இறுதிக் காலம்வரை எளிய கதர் ஆடையையே உடுத்தும் வைராக்கியத்தை கொண்டு அதன்படியே வாழ்ந்தவர். தொடர்ந்து அவர்களது சேவைகளைக் கண்டு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், அருகில் உள்ள பெண்களுடன் இணைந்து உலகப்போரில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினருக்கு, மருந்துகள், துணிகள் சேகரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டார்.மேலும் காந்தியின் வழியில் அறப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தடை செய்யப்பட்டிருந்த பாரதியின் பாடல்களைப் பொதுமக்களிடையே உரக்கப் பாடியபடி ஊர்வலம் செல்வது, அந்நியத் துணிகளை எரிப்பதுடன், கள்ளுக்கடை மறியல் எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டார். 1929-ல் திருவல்லிக்கேணியில் 'சுதேசி லீக்' என்ற சங்கத்தினை அமைத்தார். வீதி வீதியாகச் சென்று கதர் ஆடைகளை விற்பனை செய்தார். உப்பு சாத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர், மற்றுமொரு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றபோது, சிறைச்சாலையை கல்விச் சாலையாக மாற்றி பெண்கள் பலருக்கு கல்வி வழங்கினார். காந்தியின் ஆஸ்தான மகள் என்னும் அளவிற்கு இவரின் சுதந்திர போராட்ட பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றது. மேலும் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1948-ம் ஆண்டு தேனாம்பேட்டையில் ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தை நிறுவினார், அங்கு ஏழைகளுக்கு இலவசமாக பால், மருந்துகள் மற்றும் கஞ்சி போன்றவற்றை வழங்கினர்.

சொர்ணதாம்பாள்

மதுரையை சேர்ந்த சொர்ணதாம்பாள் இயல்பிலேயே போராட்டம் குணத்துடன் இருந்தவர்,இவருடைய கணவரும் சுதந்திர போராட்ட வீரகள் என்பதால் இருவரும் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுதந்திர போராட்டத்தின் பல மறியல்கள், போராட்டங்கள் என ஈடுபட்ட இவரை ஆங்கிலேயே அரசு அடிக்கடி சிறையில் அடைத்தது. ஆனாலும் தொடர்ந்து தனி நபர் சத்தியாகிரகம் போராட்டங்களிலும் கலந்து கொண்டு மூன்று மாதங்கள் சிறை சென்றார்.இது போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட இவரை ஆங்கிலேயே அரசின் காவல்துறை கைது செய்ததுடன், கூட போராடிய பெண்ணுடன் சேர்த்து ஆடைகளின்றி அழகர் மலையில் ஒரு இரவில் விட்டு விட்டு சென்றனர். அதன் பின்னும் சொர்ணத்தாம்பாளின் சுதந்திரத்திற்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
கே.பி. ஜானகியம்மாள்
மதுரையை சேர்ந்த இவர், 1917-ம் ஆண்டு பிறந்தார். சிறுவயதிலேயே நாடக துறைக்கு சென்றவர், அங்கிருந்து சுதந்திரத்திற்கான போராட்டத்தில் பங்கேற்க ஆரம்பித்தார். இதனால் ஐந்துமுறை வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார். பின்னாளில் கம்யூனிஸ்ட் இயக்கமாக அவ்வியக்கத்திலே தொடர்ந்து இருந்தார். போராட்டத்தின் ஒரு பகுதியாக பல மேடை பேச்சுகளை பேசியுள்ளார். முக்கியமாக இரண்டாம் உலகப்போரில் இந்திய வீரர்களை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்திய பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்துப் போர் எதிர்ப்பு கூட்டங்களில் பேசிய ஜானகி அம்மாள், "நாங்கள் அடிமைப்பட்டு கிடப்பதால்தானே எங்களை போரில் ஈடுபடுத்துகிறீர்கள்" என்றார்.இதனால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் தென்னிந்தியப் பெண்மணி இவர்தான். பல போராட்டங்களில் ஈடுபட்டாலும் குறிப்பாக மதுரை ஹார்வி மில்லுக்கான போராட்டமும், நிலப் பிரபுத்துவத்துக்கு எதிராகவும் அவர் நடத்திய போராட்டமும் முக்கியத்துவம் வாய்ந்தது.தொடர்ந்து இந்திய சுதந்திரத்திற்கு பின் அரசியலில் ஈடுபட்ட இவர், சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும்பாலும், விவசாயிகள், நலிவடைந்தோரின் நலனுக்காக உழைத்தார்.

பத்மாசனி அம்மாள்

மதுரையை சேர்ந்த இவர், தன் கணவருடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். காதர் ஆடையை விரும்பி ஏற்ற அவர், மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். கணவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறை செல்ல, தனியாக போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். காவேரி யாத்ராவில் பங்கேற்று போராட்டத்தின் போதே பெண் குழந்தையை பிரசவித்த இவரின் குழந்தை மாறுபட்ட சூழலின் காரணமாக உயிரிழந்தது.தொடர்ந்து கர்ப்பிணியாக இருந்த போது போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக சிறை சென்ற அவருக்கு, கருக்கலைப்பு ஏற்பட விடுதலையாகி வந்த பின் அயராது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். 1927-ல் மவுண்ட் ரோட்டில் உள்ள பிரிட்டிஷ் கர்னல் ஜேம்ஸ் நீலின் சிலையை வீழ்த்த விரும்பிய எஸ்.என்.சோமயாஜுலு தலைமையிலான இளைஞர்களுக்கு நிதியாக தனது நகைகளை வழங்கினார். இந்த போராட்டம் 'நீல் சிலை சத்தியாக்கிரகம்’ எனக் கூறப்படுகிறது. கதர் ஆடையை உடுத்திய அவர், அதன் விற்பனையை அதிகப்படுத்தவும், கதரையே ஆயுதமாக்கி போரிடவும் சகோதரிகள் சங்கம் என்ற சங்கத்தை நிறுவினார்.

முடிவுரை

 எத்தனையோ தியாக தீபங்கள் தன்னை உருக்கி நமக்கு சுதந்திர காற்றை தந்து உள்ளார்கள் அவர்களை என்றும் மறவாமல் அவர்களின் நினைவை போற்றுவோம். பெண்களின் மேன்மையை போற்றுவோம்.

- சி. தேவி பிரியா
PhD scholar ,