நாடு போற்றும் நல்லவர் 051

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

நாடு போற்றும் நல்லவர் 051

நாடு  போற்றும்  தலைவர்

=========================
வறுமைக்  குடும்பத்தின்
வற்றா  நதியே

அறிவின் பிறப்பே
அம்பேத்கார்   ஆனாரே

குடும்பம் துறந்து
குறைகள்  கடந்து

வெளிநாடு  சென்று
சான்றோர் ஆனவரே

மனித  பாகுபாடுகளைக்
களைந்து  எறிந்தவரே

சமத்துவத்தை  நிலைநாட்டி
சரித்திரம் படைத்தவரே

பிறப்பால் எல்லோரும்
சமமென  கொண்டாரே

தீண்டாமைக் கொள்கைக்கு
விடுதலை  தந்தவரே

அறிவிலே சுடராய்
ஆற்றலின்  அடைமொழியாய்

அகிம்சையின் தத்துவமாய்
அடக்கத்தின் உருவமாய்

புரட்சியின்  வீரமாய்
எழுச்சியின் வேகமாய்

கலங்கரை  விளக்கமாய்
மாமேதை  திகழ்ந்தாரே

பெண்கள்  முன்னேற்றத்தை
பெரிதும் மதித்தாரே

  மூடநம்பிக்கைகளை வேரறுத்து
 
 தன்னம்பிக்கையை விதைத்திட்டவரே 

உந்தனது புகழ்கள் 
உலகமே  போற்றிடுமே

பொற்பதம்  வணங்கியே 
போற்றியே பணிகிறேன்

-சி. மீனாட்சி
ஆன்மிக லட்சுமி

C.Ramaswamy                                                             S1,No 84,Annai Velankanni Nagar phase 1,5th street, madanandapuram ,chennai-600116