காதலர் தினம் 052
அன்பு க் கவி விருது கவிதைப் போட்டி
*காதலர் தினம்*
சொல்லும் போது வார்த்தைகள் திக்கும்
சொன்ன பிறகு மனதில் இனிக்கும்
வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி தொடரும்
மறக்க முடியாத கவிதை ஆகும்
இயற்கை வளம் ரசிக்க வேண்டும்
பராம்பரிய உணவு ருசிக்க வேண்டும்
புத்தகம் படித்து அறிய வேண்டும்
வாழ்த்துக்கள் கூறி மகிழ வேண்டும்
விட்டு கொடுத்து வாழ வேண்டும்
சமரச போக்கு இருக்க வேண்டும்
நல்லதை கேட்டு நடக்க வேண்டும்
வாழ்க்கை நம்பிக்கையோடு சிறக்க வேண்டும்
பெரியோர்கள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்
மூத்தோர்கள் அறிவுரை மதிக்க வேண்டும்
பழைய நினைவுகளை பகிர வேண்டும்
புதிய மாற்றங்கள் ஏற்க வேண்டும்
எஸ் வீ ராகவன் சென்னை
Comments (0)