அன்பே...!
அன்பு கவிதைகள்
அன்பே!
உன் முகவரி தேடித்தானோ முழுமதியும் வானில் அலைகிறது!
உன் கருங்கூந்தல் கண்ட வான் மேகம் கலைந்து ஓடுகிறது!
உன் புன்சிரிப்பு கண்ட பூக்கள் எல்லாம் பூக்க மறுத்துவிட்டது!
உன் விழிகண்ட கெண்டை மீன்களும் தோற்றுவிடுவோம் என கடலுக்குள் மூழ்கி கொண்டது!
மாவடு மாறிமரத்திலே இலை மறை கனியாய் இருக்க!
படைத்தவனே பார்த்து வியக்க!
பாவம்கவிஞன்நானோ! கவிகளையேமறக்க!!
கவிதைமாணிக்கம்
Comments (0)