தீப ஒளி ஏற்றி தீமையை வெல்வோம்...
தீபாவளி கவிதை
தீபவொளி ஏற்றி தீமையை வெல்வோம்..
தீபவொளி வெளிச்சம்
ஆனந்தம் மழையாய்//
உள்ளத்தில் பொழிந்து
தீமையை ஓழிக்கும்//
காலை விடியல்
மலரும் மலகலாய்//
புன்னகை முகத்தில்
மலர்ந்து பூத்திருக்கும்//
விழிகளை கவரும்
ஏழு நிறங்களாய்//
புத்தடை வண்ணங்கள்
இல்லத்தை மயக்கும்//
பொழியும் மழையில்
ஓடும் அருவியாய்//
நல்ல எண்ணங்கள்
மனதில் ஓடும்//
கடந்ததை மறந்து
தீபாவளி திருநாளில்//
மத்தாப்பு உறறோடு
வெளிச்சத்தை உருவக்கும்//
இரா.சி.மோகனதாஸ்
Comments (0)