மதில் மேல் பூனையும் சுட்ட கருவாடும்..

புதுக்கவிதை

மதில் மேல் பூனையும் சுட்ட கருவாடும்..

மதில் மேல் பூனையும் சுட்ட கருவாடும்

ஒரு ஊரில் ஒரு பூனை
இரவில் மதில்மேல்தான் படுத்துறங்கும்
காலையில் சூரியன் 
சுள்ளென்று அடித்தாலும்
கண்விழிக்காது
ஆனால் பக்கத்து வீட்டில்
கருவாடு சுடும் வாசனை
காற்றில் வந்தால் போதும்
உடனே கண்விழித்து விடும்
" சூரியனைப்பார்த்து
 எப்போதுமே
இப்படித்தான் சொல்லும்
"நூறு விடியல்களை
நீ கொண்டு வந்தாலும்
ஒரு கருவாட்டை சுடும் வாசனைக்கு
அவைகள் ஓர் நாளும் ஈடாகாது"

தங்கேஸ்