என்னவனே...! 040
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி
காதல் கவிதை என்னவனே...
வானவில்லும் காணாத
வண்ணம்
என்னவனின்
அழகிய எண்ணம்...
ஓய்வே
கிடையாது
உனை நேசிப்பதில்
மட்டும்
என் மனதுக்கு...
இல்லாத போதும்
கண்களுக்குள்
வாழ்கின்றாய்...
மண்ணில் விழுந்த
மழைத்துளியாய்
உன் மனதோடு
தொலைத்தே விட்டேன்
என்னுயிரை...
அசைபோடும்
உன் நினைவில்
அசைவற்று
காத்திருக்கு
விழிகள்
நீ வருவாய் என...
தனித்து சென்றாலும்
துரத்தி வருகிறாய்
நினைவாகி என்னை
கண்களை மூடினாலே
கனவாக வந்து
கொள்கிறாய்
விழிகளுக்குள் விலகாமல்
ரசிக்க ரசிக்க
சலிக்காத
கவிதை நீ
என் கண்களுக்கு...
- வே. சாந்தி
சொக்கலால் சரஸ்வதி சத்திரிய வித்யா சாலா ஆரம்பப்பள்ளி,
முக்கூடல்.
திருநெல்வேலி மாவட்டம்.
Comments (0)