இனிக்கிறது இதயம்...! 039

அன்புக் கவி விருது கட்டுரைப் போட்டி

இனிக்கிறது இதயம்...! 039

இனிக்கிறது இதயம்...

முதல் சந்திப்பு

முத்தானதா?  

நான் அறியவில்லை!

இரண்டாம் சந்திப்பு

இன்பமானதா? 

நான் அறியவில்லை!

நம் வாழ்வின் தொடக்கம் 

நனி சிறந்ததா?

நான் அறியவில்லை!

பசுமையான நாட்கள்

பரிசுகள் நிறைந்தவையா?

நான் அறியவில்லை!

வாழ்வின் பாதை 

வானளவு வலிகள் நிறைந்தனவோ?

நினைவில்லை.... எனக்கு நினைவில்லை...

எதுவும் எனக்கு நினைவில்லை!

எதுவும் நான் அறியவில்லை!

என் நெஞ்சில் நிறைந்திருப்பது

நின் பார்வை காட்டிய கரிசனம்!

நின் கரங்கள் கொடுத்த நம்பிக்கை!

நின் பாதங்கள் துணை நின்ற இடங்கள்!

நின் பாதுகாப்பு வளையத்தில் நான்!

இந்த பந்தம் காதலா?

இது அன்பின் பாதையை?

காதலே! அன்பே!

காதலே! அன்பே!

என 

கரைகிறது நெஞ்சம்!

இனிக்கிறது இதயம்!

உன்னால் 

இனிக்கிறது இதயம்!

ஆம்

இனிக்கிறது இதயம்!

-அகிலா கண்ணன், அமெரிக்கா.