புரட்சியாளர் அம்பேத்கர் 048

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

புரட்சியாளர் அம்பேத்கர் 048

புரட்சியாளர் அம்பேத்கர்

சித்திரையில் பிறந்து
அரசியலமைப்பில் தன் முத்திரையை பதித்த
சட்ட மேதையாம்!
சரித்திர நாயகனாம்!
சாதிய வேற்றுமை களைய சட்டம் பல இயற்றியவராம்!
ராம்ஜி எனும் நாமம் கொண்டு ராஜநடை போட்டவராம்!
மகாதேவ் எனும் மாமனிதரால் மாண்புடன் காக்கப்பட்டவராம்!
கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் கனிவாய் பாடம் கற்றவராம்!
கோணி பையில் அமர்ந்து கற்று
கோட்டு சூட்டு போட்டவராம்!
முனைப்புடனே கல்வி கற்று பல
முனைவர் பட்டம் பெற்றவராம்!
வட்ட மேசை மாநாட்டில் வாக்குரிமைக்கு போராடினாய்!
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஓட்டுரிமை பெற்றுத் தந்தாய்!
அரசியலமைப்புச் சட்டத்தை
ஆக்கமுடன் நீ படைத்தாய்!
ஆகச் சிறந்த சட்டமென ஆன்றோரும் ஏற்று நின்றார்!
புத்தமத கொள்கை பல பூரணமாய் நீ பெற்றாய்! புண்ணிய பூமியிலே பூமிப்புத்திரராய் போற்றப்பட்டாய்!
அண்ணல் அம்பேத்கர் திருநாமம் வாழ்க!

-கவிஞர்.கோ.கவிதா
கடலூர்.