சட்ட மாமேதைக்கு சமர்ப்பணம்
அம்பேத்கார் பிறந்த நாள் சிறப்பு கவிதை
சட்ட மேதைக்கு சமர்ப்பணம் ...
மராட்டிய மாநிலத்தில் பிறந்த மாண்பு உள்ளவரே//
"ஜெய்பீம்" முழக்கத்தை உயிர்நாடியாக கொடுத்த அன்பரே //
எண்ணற்ற துன்பங்களையும் எண்ணில்லா இன்பங்களையும் பெற்றவரே //
கற்ற கல்வி யாரும் கல்லாத கல்வி //
அமெரிக்கா சென்று முதல் இந்தியனாக படித்தவரே //
குறுதிகள் அனைத்தும் சிவப்பு நிறத்திலே ஓடுகின்றனவே//
ஓடிவிடு தீண்டாமை எண்ணம் பேயே என்றவரே //
பொறுப்பேற்ற துறைகள் கூறுமே உன் திறனை //
தன் வாதத் திறத்தால் காந்தியையும் மாற்றியவரே //
விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானவரே//
குடிமக்களின் உரிமைக்காக பல சட்டங்களை எழுதியவரே//
வாசிப்பே நாள் முழுதும் உனது சுவாசிப்பானதே//
நூல்களை நேசித்து நேசித்து அறிவை பெருக்கியவரே //
பொருளாதாரத்தை பற்றிய புத்தகம் வழங்கிய அறிஞரே//
பௌத்த மதம் பின்பற்றி விளக்கம் கொடுத்தவரே //
எதற்கும் பயம் கொள்ளாத நெஞ்சம் படைத்தவரே //
இன்னல்களையும் அநீதிகளையும் வேரோடு அறுத்த நாயகனே //
பொ.ச.மகாலட்சுமி
கோவை
Comments (0)