நாடு போற்றும் நல்லவர் அம்பேத்கர் 069

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

நாடு போற்றும் நல்லவர் அம்பேத்கர் 069

நாடு போற்றும் நல்லவர் அம்பேத்கர்

அறிவிலே சுடராய்!
ஆற்றலின்  அடைமொழியாய்!

அகிம்சையின் தத்துவமாய்!
அடக்கத்தின் உருவமாய்!

சமூகத்தின்  ஆர்வலராய் !
சட்டத்தின் காவலராய்!

அறிவில் சிறந்தவராய்!
ஒழுக்கத்தில் உயர்ந்தவராய்!

அரசியலமைப்பின் தந்தையாய்!
ஏழையின் விடிவெள்ளியாய்!

புரட்சியின்  வீரமாய்!
எழுச்சியின் வேகமாய்!

கலங்கரை  விளக்கமாய்!
மாமேதை  திகழ்ந்தாரே!

பெண்கள்  முன்னேற்றத்தை!
பெரிதும் மதித்தாரே!

  மூடநம்பிக்கைகளை வேரறுத்து
 தன்னம்பிக்கையை விதைத்திட்டவரே! 

உந்தனது புகழ்கள் 
உலகமே  போற்றிடுமே!

பொற்பதம்  வணங்கியே !
போற்றுகின்றோம் உன்னையே!

-கு.ராமராதா
ஆசிரியை
ராஜபாளையம்