கவியரசு கண்ணதாசன்
கண்ணதாசன் கவிதை
முத்தையா என்ற
முத்துதே சிறுகூடல்பட்டியின் வித்தே
கவிபேரரசர் கண்ணதாசனாய்
கண்களைக் கவர்ந்தாய்
காவியத்தின் நாயகனாய்
கலைநயம் கொண்டாய்
கவிதைகளும் கட்டுரைகளும் திரைப்படப் பாடல்களும்
பலநூல்களும் தொகுத்தாய்
தென்றல் தென்றல்திரை முல்லை இதழ்களின் ஆசிரியருமாவாய்
படிப்பில்பட்டம் வாங்காவிட்டாலும்
பாரிலுள்ள புகழெனும்
பட்டத்தைச் பெற்றாய்
பாரதியாரின் பாடல்களும்
கம்பரின் செய்யுளிலும்
நாட்டம் கொண்டாய்
இந்து மதத்தில் பிறந்தாலும்
இயேசு காவியம்
அர்த்தமுள்ள இந்துமத எனும் படைப்புகள் கொடுத்தாய்
சாகித்ய அகாதமி விருது பெற்றாய்
பலபாடல்களையும் நூல்களையும் எழுது
தமிழுக்குப் பெருமை சேர்த்தாய்
என்றும் உன்புகழ் மக்கள் நெஞ்சத்தில் நீங்காது பூக்கும்
கிருஷ் அபி இலங்கை
Comments (0)