புரட்சிக் கனல் 011
அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி
புரட்சிக்கனல் அம்பேத்கர்
கல்லாமை எனும் காரிருள்
நீக்கவந்த கலங்கரை விளக்கம் !
தீண்டாமை நோயை விரட்டி
சமத்துவம் பேணிய புரட்சியாளர் !
சாதிமதங்களை தீயிட்டு கொளுத்திய
சரித்திர நாயகன் - தன்
அறிவாற்றலால் பட்டங்களையும்
சட்டங்களையும் உரித்தாக்கியவர் !
பாமரனையும் கல்வி கற்க ….
தூண்டிய அறிவுச்சுடர் !
பெண்கள் முன்னேற்றத்தை
பெரிதாய் நேசித்தவர் !
சாதி தான் சமூகமெனில்
வீசும் காற்றில் விஷம்
பரவட்டுமென முழங்கியவர் !
விமர்சனங்களை உடைத்தெறிந்து
உலகையே தன்பால் கவர்ந்தவர் !
சுயசிந்தனையும், சுய மரியாதையும்
இவரது தலைக்கவசம் !
கற்பி, புரட்சிசெய், ஒன்றுசேர்
தாரகமந்திரத்தின் தனித்துவமிவர் !
இந்திய அரசியல் சாசனத்தால்….
மகுடம் சூட்டப்பட்ட மாமேதை !
மூடநம்பிக்கைகளை வேரறுத்து
தன்னம்பிக்கையை விதைத்திட்ட
சீர்த்திருத்த செம்மல் !
ஒடுக்கப்பட்ட சமூகத்தின்
உரிமைகளை மீட்டெடுத்த…..
விடிவெள்ளி வேந்தன் !
பிரிவினையையும் வேற்றுமையையும்
தகர்த்தெறிந்த தன்னிகரற்ற தலைவன் !
இப்படியாய்….உமைப்போற்றி புகழ
இப்பிறவிதனை எண்ணி - ஒருகணம்
பெருமிதம் கொள்கிறேன் நான் !
மதிப்புறு முனைவர்.நா.பாரதி ,கள்ளக்குறிச்சி .
Comments (0)