உலக முதியோர் அவமதிப்பு தினம்

உலக முதியோர் அவமதிப்பு தினம் கவிதை

உலக முதியோர் அவமதிப்பு தினம்

உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம்  ஜூன் 15

ஆலைமரமாய் நம் முதியவர்கள் 
அதைத் தாங்கும் வேர்களே நாம்
அவர்களை அவமதித்தல் ஆகாது

பெரியவர் வீட்டிலிருப்பது
பெரும் பாக்கியமே
அறிவையும் ஆற்றலையும் மனக் கண்ணையும் திறந்திடுவர்

பார்த்துப் பார்த்து பக்குவம் சொல்லிடுவர்  பலகதையும் பழங்கதையும் 
கூறிப் பண்பைப் புகட்டுவர்

மூப்பில் முதுமை
முடங்காத திறமை
பாசத்தில் ஆழி
பண்பாட்டின் அரண்
வாழும் இருப்பிடம்
வரமான கோவில்

மதிப்பளித்து மனதாரப்
பாருங்கள் தாழ்த்திப் பேசாதிர்கள் 
மதிப்பை உடைக்காதீர்கள்
மரியாதையைச் சிதைக்காதீர்கள்
பெரியோரை போற்றாவிட்டாலும்
 அவமதிக்காது நடந்து கொள்ளுங்கள்

தமிழ் நதி கிருஷ் அபி இலங்கை