அண்ணா ஒரு சரித்திரம் 052.

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

அண்ணா  ஒரு சரித்திரம் 052.

அண்ணா ஒரு சரித்திர நாயகன்

தமிழ்நாட்டின் தவப்புதல்வன்
தலைமையகத்தின் தலைமகன்
தமிழரின் இதயதெய்வம்
தன்னலமின்றி சரித்திரம் படைத்தவர்
தன்னடக்கத்தின் சிங்கம்
தன்னம்பிக்கையை விதைத்தவர்
தலைக்கணம் இன்றி வாழந்தவர்
தித்திக்கும் பேச்சால் தென்னகத்தின் நாயகனாய்
அரசியலின் ஆசானாய் அறிவின் சுடராய்
அணையா விளக்காய்
அனைவரின் மனதிலும் வாழும்
அண்ணாவை நினைப்போம்
அவர் வழிநடப்போம்.

சா.ஜெயந்திராணி எம்.ஏ., பி.எட்., எம்.பில்.,
முதுநிலை ஆசிரியர்
கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை ,
சென்னை - 15.