புரட்சிக்காரன் ..! 033
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
புரட்சிக்காரன்..
எட்டயபுரத்தில்
பிறந்த தமிழ்க்
கவிஞன்//
செந்தமிழைப்
புகழ்ந்த
மறத் தமிழன்//
பொட்டு வைத்த
புரட்சிக் காரன்//
பாரத நாட்டுக்கு
சொந்தக் காரன்//
அவன் எழுதிய
தேசியப் பாட்டு//
பரங்கியர் ஆட்சிக்கு
வைத்தது வேட்டு//
புரட்சிஎனும்
சொல்லை
முதலில்
சொன்னவன்//
கண்ணனை
காதலனாய்
தோழனாய்ப்
பார்த்தவன்//
மதம்கொண்ட
வேழத்தால்
மண்ணிலே
வீழ்ந்தவன்//
மறைந்தாலும்
மக்கள்
மனதிலே
நிறைந்தவன்//
ப. குமரகுரு
நாகப்பட்டினம்
Comments (0)