அறிவுச் சுடர் அம்பேத்கர் 012

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அறிவுச் சுடர் அம்பேத்கர் 012

அறிவுச்சுடர் அம்பேத்கர்

தமிழ் வருட பிறப்பில் பிறந்த தங்கம் -நீ,

பாமர குடும்பத்தில் வளர்ந்த சிங்கம்- நீ,

மனித குலத்திற்கு வந்த மாணிக்கம்- நீ,

மகத் சத்தியாகிரகம் செய்த மன்னன்- நீ,

சாதியை ஒழித்த சாதனையாளன்- நீ,

பாரிஸ்டர் பட்டம் பெற்ற பாமரன்-நீ,

அரசியல் அமைப்புச் சட்டத்தின் தந்தை- நீ,

உலக மக்கள் வியக்கும் விந்தை -நீ,

சமூகத்தால் 'தீட்டு' என ஒதுக்கப்பட்டவன்- நீ,

கல்வியால் 'வா' என அணைக்கப்பட்டவன் -நீ,

இரு கைகளாலும் எழுதும் திறன் படைத்தவன்- நீ ,

சட்ட மேதையாக சகாப்தம் படைத்தவன்- நீ,

புத்த மதத்தால் ஈர்க்கப்பட்டவனும்- நீ,

வீழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளி-நீ,

தாழ்த்தப்பட்ட மக்களின் தவப்புதல்வன்- நீ,

நலிவடைந்த மக்களின் நங்கூரம்- நீ,

ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்காரம்- நீ,

இன்னலைப் போக்கிய அண்ணல் - நீ,

பாரத ரத்னா விருது வென்றவன் - நீ ,

எங்கள் சிந்தையில்- நீ,

பொருளாதார சந்தையில்- நீ,

புரட்சியாளனாகவும் -நீ,

சரித்திர நாயகனாகவும்- நீ,

பிராண்ட் அம்பாசிடர் அல்ல- நீ,

உலகமே வியக்கும் அம்பேத்கர்- நீ!

பெயர் : மு. பவதாரணி, 
திருவண்ணாமலை,
கைப்பேசி: 9360803044