அறிவுச் சுடர் அம்பேத்கர் 012
அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி
அறிவுச்சுடர் அம்பேத்கர்
தமிழ் வருட பிறப்பில் பிறந்த தங்கம் -நீ,
பாமர குடும்பத்தில் வளர்ந்த சிங்கம்- நீ,
மனித குலத்திற்கு வந்த மாணிக்கம்- நீ,
மகத் சத்தியாகிரகம் செய்த மன்னன்- நீ,
சாதியை ஒழித்த சாதனையாளன்- நீ,
பாரிஸ்டர் பட்டம் பெற்ற பாமரன்-நீ,
அரசியல் அமைப்புச் சட்டத்தின் தந்தை- நீ,
உலக மக்கள் வியக்கும் விந்தை -நீ,
சமூகத்தால் 'தீட்டு' என ஒதுக்கப்பட்டவன்- நீ,
கல்வியால் 'வா' என அணைக்கப்பட்டவன் -நீ,
இரு கைகளாலும் எழுதும் திறன் படைத்தவன்- நீ ,
சட்ட மேதையாக சகாப்தம் படைத்தவன்- நீ,
புத்த மதத்தால் ஈர்க்கப்பட்டவனும்- நீ,
வீழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளி-நீ,
தாழ்த்தப்பட்ட மக்களின் தவப்புதல்வன்- நீ,
நலிவடைந்த மக்களின் நங்கூரம்- நீ,
ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்காரம்- நீ,
இன்னலைப் போக்கிய அண்ணல் - நீ,
பாரத ரத்னா விருது வென்றவன் - நீ ,
எங்கள் சிந்தையில்- நீ,
பொருளாதார சந்தையில்- நீ,
புரட்சியாளனாகவும் -நீ,
சரித்திர நாயகனாகவும்- நீ,
பிராண்ட் அம்பாசிடர் அல்ல- நீ,
உலகமே வியக்கும் அம்பேத்கர்- நீ!
பெயர் : மு. பவதாரணி,
திருவண்ணாமலை,
கைப்பேசி: 9360803044
Comments (0)