அறிவுச்சுடர் அம்பேத்கர் 013

அறிவுச்சுடர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அறிவுச்சுடர் அம்பேத்கர்  013

அறிவுச்சுடர் அம்பேத்கர்
* அறிவை ஆயுதமாக்கி !
அடிமை விலங்கை உடைக்க
எப்படி முடிந்தது உன்னால் (உங்களால்)
* கல்லாமை இல்லாமையாக்கும் !
எழுத்தறிவே ஏற்றம் என்று
ஏட்டை பிடிக்க –
எப்படி முடிந்தது உன்னால்

* தரை அமர்ந்து கற்று
தரணி போற்றும் அரியாசனம்
தனி ஆசனம் பெற்றிட
எப்படி முடிந்தது உன்னால்
* வறுமையின் வாயிலை திறக்க
ஏடும் எழுதுகோலும்
சாவி என்று கணித்திட
எப்படி முடிந்தது உன்னால்
* ஒதுக்கி, ஒடுக்கி, தனித்து தடுத்த
அவமானங்களை வெகுமானமாக்கி 
புத்தகம் ஏந்திட
எப்படி முடிந்தது உன்னால்
* பின்தள்ளி பின்னே தள்ளிய வர்க்கத்திடம்
முன் செல்ல, முன்னே செல்ல
எழுதுமுனையை எடுக்க
எப்படி முடிந்தது உன்னால்
* மனிதனை மனிதனாக்க
மனிதத்தை சட்டமாக்க
எப்படி முடிந்தது உன்னால்
* பொருளியல், அரசியல், மெய்யியல்
மை இயலால் நினறத்திட
எப்படி முடிந்தது உன்னால்
*அறிவைத் தேடி ஓடினால்
அகிலம் வாழ வாழ்வோம் !
அழியாத வரலாறு காண்போம் !
என்று அன்றே கணித்திட
எப்படி முடிந்தது உன்னால்!
உங்களால்!
சமர்ப்பணம் சட்ட மேதைக்கு !
மரியாதை மாமேதைக்கு !

-எ.விக்னேஸ்வரி எம்ஏ பிஎட்
ஆசிரியை
ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. ஆவாரம்பாளையம்.
கோவை -6.