காதலர் தினம்...! 013
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி
காதலர் தினம்
அன்பு இசையில்
உலகம் மயங்கிடும்//
காதல் மழையில்
உள்ளம் நனைந்திடும்//
காதலின் புன்னகை
மின்னலாய் மின்னிடும்//
காதல் வரிகள்
எண்ணத்தில் சுற்றிடும்//
நம்பிக்கை ஆலமாய்
உள்ளத்தில் வளர்ந்திடும்//
இதயம் கதவில்
சுவாசம் வீசிடும்//
கனவில் உருவம்
சுற்றி அலைந்திடும்//
நிலவின் ஒளி
முகத்தில் உறங்கிடும்//
கூந்தல் மல்லி
காந்தமாய் வீசிடும்//
பேசிய வார்த்தைகள்
செவியில் இசைத்திடும்//
கதைகள் பேசி
உறக்கம் மறைந்திடும்//
பூக்களின் வாசம்
கையில் மணந்திடும்//
கண்கள் சிறையில்
கவிதைகள் சிக்கிடும்//
மாதுளம் கனிகள்
உதத்தில் வசித்திடும்//
காதலான் அன்பு
நிழலாய் தொடர்ந்திடும்//
இரா.சி.மோகனதாஸ்.
Comments (0)