காதலர் தினம்...! 013

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

காதலர் தினம்...! 013

காதலர் தினம்

அன்பு இசையில்
 உலகம் மயங்கிடும்//
காதல் மழையில்
 உள்ளம் நனைந்திடும்//
காதலின் புன்னகை 
மின்னலாய் மின்னிடும்//
காதல் வரிகள் 
எண்ணத்தில் சுற்றிடும்//
நம்பிக்கை  ஆலமாய் 
உள்ளத்தில் வளர்ந்திடும்//
இதயம் கதவில் 
சுவாசம் வீசிடும்//
கனவில் உருவம்
சுற்றி அலைந்திடும்//
நிலவின் ஒளி 
முகத்தில் உறங்கிடும்//
கூந்தல் மல்லி 
காந்தமாய் வீசிடும்//
பேசிய வார்த்தைகள் 
செவியில் இசைத்திடும்//
கதைகள் பேசி 
உறக்கம் மறைந்திடும்//
பூக்களின் வாசம்
கையில் மணந்திடும்//
கண்கள் சிறையில்
கவிதைகள் சிக்கிடும்//
மாதுளம் கனிகள்
உதத்தில் வசித்திடும்//
காதலான் அன்பு 
நிழலாய் தொடர்ந்திடும்//

இரா.சி.மோகனதாஸ்.