புன்னகை

நம்பிக்கை வரிகள்

புன்னகை

புன்னகை என்பது மனிதனின்
நோயற்ற வாழ்விற்கு மருந்தாகும்.

இன்னல்கள் பல நேரினும்
இன் முகத்துடன் எதிர் நோக்கின்
இடைஞ்சலும் இடம் பெயறும்.

எதிர் வரும் பகையும் அன்புடன்
புன்னகைத்து அரவணைத்தால்.
பகை உணர்வு மங்கிவிடும்.

எத்துயர் நேரினும் உள்ளத்துள்
உரம் போட்டு வளர்த்தால்...
பல நோய்கள் பல நாள்
பரிகாசம் செய்யும்.
புன்னகை பூத்து கவலைகளை
விரட்டு.

நோயும் நொடியில்
நொறுங்கிவிடும். புன்னகையால் சுற்றமும்
விரிவாகும்.
நட்பும் நலமாகும்

எனவே…………

வெறுப்பை தவிர்த்து
வேதனையை குறைத்து
புன்னகையால்
புகழ் சேர்ப்போம்.