பூக்களின் அரங்கேற்றம்...

புதுக்கவிதை

பூக்களின் அரங்கேற்றம்...

துயருற்ற வாழ்வு
தன்னைக் கை கொள்ள
ஒரு தும்பியாய்  
பறந்து திரிக  இதயமே !

கவலை  மறந்து
உன் கவிதைகளை
பூக்களிடம்  அரங்கேற்று
இந்தக்கிளையில்
இன்னுமொரு மொட்டு
புதிதாக தோன்றட்டும்

தங்கேஸ்