மகாத்மா காந்தி
காந்தி ஜெயந்தி கவிதை
மகாத்மா காந்தி
இந்தியாவில் உதித்த
இயல்பான மனிதராக...
இந்திய விடுதலைக்காக
முன்னின்ற மனிதராக...
வாய்மைக்கு எடுத்துக்காட்டாக ...
வாழும் உலகிற்கு வழிகாட்டியாக ...
எளிமையின் அடையாளமாக ...
எல்லோர் மனங்களிலும் தேசத்தந்தையாக ...
அகிம்மை வழி போராடிய தியாகியாக....
அகிலம் போற்றும் அன்பராக....
வாழும் வரை உயர்ந்தவராக...
வாழ்ந்து மறைந்த பின்பும் வழிகாட்டியாக...
சமுதாய மாற்றத்தின் விதையாக....
சமத்துவ அமைதியான இந்தியாவிற்காக...
மனங்களிலும் வாழும் மகாத்மா...
மறைந்தாலும் மாற்றம் செய்துக்கொண்டிருக்கும் மகாத்மா...
இரா.காயத்ரி ,ஆசிரியை
தருமபுரி மாவட்டம்.
Comments (0)