காந்தி மகான்

காந்தி ஜெயந்தி கவிதை

காந்தி மகான்

காந்தி மகான்

அன்பின் மறுவுருவே
அகிம்சைத்
திருவுருவே

அண்ணல் காந்தியே
அன்னையானவரே
தந்தையானவரே

எங்கள் தேசப்பிதாவே
தேசந்தனை
மீட்க

தேவைகளைத்
துறந்தவரே
தீண்டாமை ஒழித்தவரே

சட்டம்பயின்ற
சமாதானமே
சகலத்
துன்பங்களையும் சகிப்புத்தன்மையால் கடந்தவரே
அன்பால்

உள்ளங்களை
உலகை
உணர்வுகளை மதித்த தேசப்பிதாவே

வார்த்தைக்கும் 
செய்ல்களுக்கும்
வலிமையுண்டு
என்று நிரூபித்தவரே

எங்களின் தந்தையே
தன்னலம் கருதாமல்

நம்முடைய நாட்டை மீட்க
நானிலம் முழுவதுக்கும்

நாசகார
சக்திகளை எதிர்த்து
சிறைசென்றவரேதன்னை பூட்சுக்காலால. மிதித்த
சிறை அதிகாரிக்கு தனது கையால் செருப்பு செய்துகொடுத்தவரே

அன்பது அகிலம் ஆளும் என்பது உணர்ந்து அனைவரையும்
உணர வைத்தவரே
உன்னதமானவரே
எங்களின்
மகாத்மாவே
தேசப்பிதாவே

அன்னியரிடமிருந்து அன்னைத்தாய நாட்டை மீட்டு நள்ளிரவில் நற்தேனினும் இனிய சுதந்திரத்தைப் பெற்றுத்தந்தவரே

பெறற்கரிய
சுதந்திரத்தைப்
பெற்றே
தனது இன்னுயிரையும்
தேசத்துக்கே கொடுத்தவரே
எங்களின் காந்தியே
தரணி போற்றிடும் தகைமை கொண்டவரே

முனைவர் கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை