தேசத் தந்தை
காந்தி ஜெயந்தி கவிதை
தேசத் தந்தை...
பாரதத்தின் ஒளிவிளக்கே/
பார் புகழும் மாணிக்கமே/
உங்களால்
சுதந்திர காற்றை
சுவாசிக்கிறோம்
நாங்கள்/
வெள்ளையனே வெளியேறு. ..என்று
அன்னியரை வெளியேற்றியவர் நீங்கள்/
தியாகம் பல செய்து,
எளிமை வாழ்வு வாழ்ந்து,
வயதான போதும் சுறுசுறுப்பாக சுற்றி வந்து ...வாழ்வை எப்படி
வாழ்வது என்று வாழ்ந்துக்காட்டியவர் நீங்கள்
அகிம்சை வழியில்
அன்பை போதித்த
உத்தமர் காந்தியின்
புகழ் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்...
நி.விஷ்ணு
சென்னை.
Comments (0)