மகாத்மா காந்தி
காந்தி ஜெயந்தி கவிதை
மகாத்மா காந்தி
என் தேசத்தின் கைத்தடி
போர்பந்தரில் பிறந்த போராட்ட நாயகரே //
நேர்மையின் சிகரமாக இருந்த நெறியாளரே //
அறவழிப் போராட்டத்தை துவக்கிய அற்புத மனிதரே //
சத்தியாக் கிரகம் வழியைப் பின்பற்றிய சத்தியவானே //
இந்திய தேசிய காங்கிரசின் இதயத்துடிப்பே //
விவசாயிகளுக்கு சம்பாரன் துவக்கிய சாணக்கியரே //
வெள்ளையனே வெளியேறு என்று சொன்ன வெள்ளை மனம் கொண்டவரே //
சுதந்திரம் பெற்றுத்தர அரும்பாடுபட்ட சுதந்திர தியாகமே //
கதர் ஆடை அணிந்த கண்ணியமானவரே //
அகிம்சை என்னும் மந்திரத்தை உலகிற்கு தந்த உத்தம மனிதரே //
வாய்மையே வெல்லும் என்று கூறிய சத்தியபிதாவே //
மனிதாபி மானத்துடன் இருப்பதே மனிதம் என்று சொன்ன மனிதருள் மாணிக்கமே //
தேசத் தந்தையாக திகழப்படும் தேசப்பிதாவே //
மகாத்மா என்று போற்றப்படும் மாமனிதரே //
மறைந்தாலும் என்றென்றும் தேசத்தந்தையாய் வாழும் தேசப்பிதாவே //
என்றென்றும் என் தேசத்தின் கைத்தடி நீவீரே... //
கவிஞர்.வங்கனூர். த.சீனிவாசன்
Comments (0)