மே தின வாழ்த்து கவிதை
உழைப்பாளர்கள் தின கவிதை
மே தின வாழ்த்துக்கள்!!
ஊதியம் கொடுப்பவர் எல்லாம் ஆண்டவனும் இல்லை !!உழைப்பவர் எல்லாம் அடிமைகளும் இல்லை!!
நாட்டில் துப்புரவுபணி செய்யிணும் ஒப்புர வாய் !ஒழுகும்!!
நாட்டு மக்களோடு தோழமையாய் பழகும்!எர்பிடித்துபார்காக்கும் விவசாயிகளே!
ஏற்றம் பெற வியர்வை சிந்தும் உழைப்பாளர்களே! பயணங்கள் சிறக்க இரவு பகல் பாராது பயணிக்கும் ஓட்டுநர்களே!!
காடு மேடுகளை சமநிலைப்படுத்தி! கண்கவர் கட்டிடங்கள் எழுப்பும் கட்டிட தொழிலாளர்களே!
மனிதர்களின் தேவைகளுக்காக இயங்கும் மாபெரும் உழைப்பாளர்கள் அனைவருக்கும்!! மேன்மை கண்ட !மே தின வாழ்த்துக்கள்!
மேதினில் சூரியன் நின்றால் இருளாகும்!! பாரினில், உழைப்பாளர்கள் நின்றாலும் இருளாகும்!
உழைக்கும் நேரத்தையும்! உழைப்பாளர்களின் மனபாரத்தையும்! முதலாளிகளின் அதிகாரத்தையும்! கட்டுப்படுத்தி !!
உலகம் சமநிலையில் இயங்க வைத்த இந்த மே தினம்!
ஊக்கம்நிறைந்த அனைத்து உழைப்ப்பாளர் தோழர்கள் அனைவருக்கும்!!
உளமார்ந்த மேதினவாழ்த்துக்கள்!!
கவிதைமாணிக்கம்
Comments (0)