நீயே பாரத தீ...! 016
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
நீயே பாரத தீ ...
வேங்கை என வேட்கை அளிக்க
வேகம் கொண்டு எட்டயபுரத்தில்
எட்டு எடுத்து வைத்த
வாய்மை உருவம் ; புலமை வாய்ந்து
புவியின் சீர்திருத்தவாதியாகி
பாடல்களின் மூலம் பாதகம் அழித்து
பாரையே அதிர செய்து
விடுதலையே தலையாய
கடமை எனக் கருதி
நாட்டின் கனவை நினைவாக்க
நிஜத்தை உரைத்த உண்மையின்
கவி வடிவ பிரதிபலிப்பு நீரே !
சன்மதி மு செ
III BA ECONOMICS
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி - 2
Comments (0)