நீயே பாரத தீ...! 016

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

நீயே பாரத தீ...! 016

  நீயே பாரத தீ ...

வேங்கை என வேட்கை அளிக்க
வேகம் கொண்டு எட்டயபுரத்தில்
எட்டு எடுத்து வைத்த
வாய்மை உருவம் ; புலமை வாய்ந்து
புவியின் சீர்திருத்தவாதியாகி
பாடல்களின் மூலம் பாதகம் அழித்து
பாரையே அதிர செய்து
விடுதலையே தலையாய
கடமை எனக் கருதி
நாட்டின் கனவை நினைவாக்க
நிஜத்தை உரைத்த உண்மையின்
கவி வடிவ பிரதிபலிப்பு நீரே !


சன்மதி மு செ 
III BA ECONOMICS 
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி - 2