அறிவோம் அம்பேத்கர் 022
அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி
அறிவோம் அம்பேத்கர்
இந்திய அரசியல் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார்
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய மாமேதை
சமுதாயத்தை முன்னேற்ற துடிக்கின்ற உணர்வு
தனிமனித உரிமைகளை மீட்டுத் தந்த தலை சார்ந்த பெரியோர்களுள் முதன்மை
மனிதகுலம் உயர்வடைய இந்தியாவில்
மடமைகளை கிழித்து எறிந்த வீர சிங்கம்
தாழ்த்தப்பட்ட மக்கள் தரையில் அமர்ந்து
கல்வி கற்பதை விரும்பாத புரட்சியாளர்
நூலகம் திறந்து நூலகம் மூடும் வரை
நூல்கள் பற்பல கற்று உயர்ந்த கல்வியாளர்
கால்களிலேசெருப்பணிந்து நடப்பதற்கும்
கருவறைக்குள்சென்று வழிபடுவதற்கும்
வேல்விழியால் கலப்புமணக்காதலுக்கும்
வேற்றுமை நீக்கி மக்கள் வாழ்வதற்கும்
பொது குளத்தில் அனைத்துபிரிவினரும்
பேதமின்றி நீர் அருந்துவதற்கும்
மேதைவென்றெடுத்தவர் தாழ்ந்தோரை நிமிரச் செய்தவர்.
இந்தியஅரசியலமைப்புச்சட்டத்தைஉருவாக்கிய தலைமை
பார் போற்றும் விடுதலை போராட்ட வீரர்
தீண்டாமை என்னும் கொடிய நோய்அகற்ற
தெருவெங்கும் புரட்சி வெள்ளம் பரவச்செய்தவர்
அறிவோம்அம்பேத்கர் அவர்களை நாளும்
அவர் வழியில் நடப்போம் புகழ்சேர்ப்போம்!
கவிஞர் ந.மலர்க்கொடி தலைமை ஆசிரியர் பெரம்பலூர்
Comments (0)