காதலுண்டு தவிக்கிறேன்... 004
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி
காதலுண்டு தவிக்கிறேன்..
உன்னைக் கண்ட நாள்முதலாய்
போதையில் மிதக்கிறேன்...
கள்ளுண்ட வண்டாய்
காதலுண்டு தவிக்கிறேன்..
உன்னோடு பகிரத்துடிக்கும் காதலுக்கும்
பகிர்ந்துவிட்ட காதலுக்கும்
நூலளவுதான் வித்தியாசம்...
தொப்புள்கொடி அறுபட்டு வெளிவர
காத்திருக்கும் சிசுவெனவே பரிதவிக்கிறது
உன்னில் பகிரத்துடிக்கும் என் காதல்
பகிரப்பட்ட காதலோ தாயின் சூட்டில்
இளைப்பாறும் சிசுவென தவமேற்கிறது..
கரங்கள் பற்றி கதைகள் பேசி
காலமதைக் கரைத்திடும்
அற்பமான ஆசையில்லையடா ...
உயிரோட்டமான உணர்வுகளால்
பிணைக்கப்பட்டு
வாழ்வின் இறுதி சொட்டு வரை
உன்னோடு உறவாடிடும்
பேராசையடா எனக்கு...
வா... திருஷ்டி சுற்றிக் கொள்வோம்
நம் காதல் கண்டு
காதலுக்கே கண்படக் கூடும்...
-கோ. ஶ்ரீஅஹிலேஷ்,
கும்பகோணம்.

Comments (0)