தீபாவளி கவிதை

தீபாவளி கவிதை

தீபாவளி கவிதை

இதிகாசத்திலும்! புராணத்திலும்! நரகாசூரனினை வதம்செய்த வெற்றி
இன்றைய தீபாவளி!

இருக்கும் நரகாசூரர்களை!வதம் செய்தால்தான் உண்மையான தீபாவளி!

இளம் பிஞ்சுகளை பாலியல் தொல்லை செய்யும் நரகாசூரனை!

இருக்கும் மாதர்களை
பலாத்காரம் செய்யும்
நரகாசூரனை!

இல்லறத்துவெற்றியாய்!! நம்மை ஈன்றெடுத்தவளை!

எல்லாவளமும் கொடுத்தவளை!
எண்ணிபாரது
முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் நரகாசூரனை!!

கற்பிக்கும் குருவையும், உலகிற்கு
காட்சிபடுத்திய மாதவையும்!
அழிக்கும் நரகாசூரனை!!

நாட்டுக்கும் ,நாட்டு மக்களுக்கும், கேடுசெய்யும்நரகா சூரனை!

அரசபதவியில்இருந்துகொண்டு !அவதூறு செய்யும் நரகாசூரனை!

மதக்கலவரம் இனக்கலவரம்! தூண்டிகுளிர்காயும்
நரகாசூரனை!!

என்று அழித்து இன்புறுகிறோமோ!
அன்றே இனிய தீபாவளி!!

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

கவிதை மாணிக்கம்