வேங்கைப் புலியே..! 036
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
வேங்கைப் புலியே...
எட்டய புரத்தின்
எழுச்சி நாயகன்
பட்டத்தில் உயர்ந்த
பார்போர்ற்றும் பார(தீ ) நீயே
எழுதுகோல் ஆயுதம் கொண்டே வெள்ளையனை எதிர்த்த
வேங்கைப் புலியே
கொள்கைகளின் கொடூரத்தை உடைத்தாயே
அடுப்பூதும் பெண்களை
அனைத்தையும் கற்கவைத்து அடிமைத்தனம் தகர்த்தெறிந்தாய்
அன்னைத் தமிழை
அலைபோல் எழச்செய்தாய்
பாட்டுடைத் தலைவனாய்
பாரதத்தின் புதல்வனாய் வலம்வந்தாய்
உயிர் மெய் கொண்ட
உயிர்த் தமிழை உலகறியச் செய்தாய்
ஓடிவிளையாடு பாப்பாவில் ஒற்றுமை உரைத்தாய்
அச்சமில்லை அச்சமில்லை
என்பதன் அர்த்தம் உரைத்தாய்
சாதிமத பேதம்
களைந்த சத்தியவான்
கண்ணம்மாவின் காதலை
கனிவான உணர்வாக்கிக் உசுப்பினாய்
காட்டாற்று வெள்ளமாய்
காவியங்கள் பாய்ந்தன
அகரம் கொண்ட சொற்கோர்வைகளும்
அமுதமான ஆழமான கவிதைகளாய் சீற்றத்தோடு சிகரம் தொட்டன
பாரதத்தின் பாரதீயே
வாழ்க உன் புகழ்
-:கிருஷ் அபி, இலங்கை.
Comments (0)