நேரு மாமா

குழந்தைகள் தின சிறப்பு கவிதை

நேரு மாமா

நேரு மாமா
ரோஜாவின் ராஜா என்றே அழைக்கப்பட்டவரே எங்கள் நேரு மாமாவே

குழந்தைகள் என்றால் கொள்ளை அன்பு வைத்தவரே

பஞ்சசீலக் கொள்கை தந்தவரே
பண்டிதரே என்றழைக்ககப்படவரே
பாரதப்பிரதமரே

மோதிலால் நேரு
சொரூப ராணியின் மகனாய்பிறந்து கங்காதர நேருவின் பேரனாய்த்தவழ்ந்தவரே

காந்தி தாத்தாவை நேசித்தவரே
சிறைக்கே சென்றே
நாட்டுப்பற்றை வளர்த்த
நற்பண்பாளரே

எங்கள் நேரு மாமா எங்களின்
பாசத்திற்கு
பொக்கிசமே

வாழ்த்த வந்தேனே
வகைமொழியோடு
நேசமுடனே நானே


முனைவர் கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை.