குழந்தையும்... நேருவும்...
குழந்தைகளுக்கான சிறப்பு கவிதை
குழந்தையும் நேருவும்
நேரு நேரு நேரு!
வெள்ளை ஆடை அணிந்தவரே!
ரோஜா சொருகி இருப்பவரே!
நேர்மையான நேரு நேரு!
ராஜா ராஜா ராஜா!
சிந்தையை நாட்டில் வைத்தவரே!
திட்டங்கள் நலமாய் வகுத்தவரே
ராஜ்ஜியத்தின் ராஜா ராஜா!
பேரு பேரு பேரு!
குழந்தைகள்மீது அன்பு கொண்டவரே!
குழந்தைகள் அழைக்கும் இவரையே!
நேருமாமா பேரு பேரு!
நேரு பிறந்த நாளையே!
குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோமே!
குழந்தைகள் தினத்தை வாழ்த்திடுவோமே!
திருக்குறள் தூதர்
க. விஜயசாமுண்டீஸ்வரி
சென்னை.
Comments (0)