பெரியாரின் மகத்துவம்
பெரியார் பிறந்த தினம் கவிதை
பெரியாரின் மகத்துவம்
சுயமரியாதை இயக்கத்தின் தூண் ஆகவே/
சுயநலமற்ற சீர்திருத்த திருமகனாம் ஈவேராவே/
சமுதாய அவலங்களை
வேரோடு சாய்த்திடவே/
சத்திய தலைவராய் தரணியில் மிளிர்ந்தாயே/
பகுத்தறிவு பகலவனாய்
பாரெங்கும் புகழடைந்தே/
பழம்பெருமை பெற்ற திராவிடர்களின் தோழனானாய்/
தீண்டாமை என்றொரு
வார்த்தைக்கு முடிவுகட்டிடவே/
தீயாய் உருமாறி புரட்சி தீபமேற்றினாய்/
மங்கையர் வாழ்விலே அடிமையென்றொரு விலங்கொடிக்க/
மண்டிக்கிடந்த சாதிய சாக்கடையை அகற்றிடவே/
மதங்களைக் கடந்த மகத்தான தெய்வமாய்/
மண்ணில் வாழ்ந்த உண்மைச் செம்மலே/
சீர்மிகு ஆற்றலாய் சிந்தனைச் சிற்பியாய்/
கூர்மிகு ஆயுதமாம் எழுதுகோலை விரும்பியே/
போராட்டக் களத்தில்
வேட்கையாய் அரிமாவொப்ப/
வாராத துன்பம் வந்திடினும் வாடாமலரே/
எடுத்த கொள்கையில்
ஏற்றம் கண்டிட/
எண்ணிய காரியம் திண்ணமாய் அமைந்திட/
எழுச்சி மாநாடு பல கண்ட/
எங்கள் வைக்கம் வீரரை
போற்றுகிறோமே/
சாதனைப் பெண்மணி கவிஞர் முனைவர்
செ .ஆயிஷா
காருண்யம் அறக்கட்டளை நிறுவனர்.
பல்லடம் .
Comments (0)