பெரியாரின் மகத்துவம்

பெரியார் பிறந்த தினம் கவிதை

பெரியாரின் மகத்துவம்


பெரியாரின் மகத்துவம்

சுயமரியாதை இயக்கத்தின்  தூண் ஆகவே/
சுயநலமற்ற  சீர்திருத்த  திருமகனாம் ஈவேராவே/ 
சமுதாய அவலங்களை 
வேரோடு சாய்த்திடவே/
சத்திய தலைவராய் தரணியில் மிளிர்ந்தாயே/

பகுத்தறிவு பகலவனாய் 
பாரெங்கும் புகழடைந்தே/
பழம்பெருமை பெற்ற திராவிடர்களின் தோழனானாய்/
தீண்டாமை என்றொரு 
வார்த்தைக்கு முடிவுகட்டிடவே/
தீயாய் உருமாறி புரட்சி தீபமேற்றினாய்/

மங்கையர் வாழ்விலே அடிமையென்றொரு விலங்கொடிக்க/
மண்டிக்கிடந்த சாதிய சாக்கடையை அகற்றிடவே/
மதங்களைக் கடந்த மகத்தான தெய்வமாய்/
மண்ணில்  வாழ்ந்த உண்மைச்  செம்மலே/

சீர்மிகு ஆற்றலாய் சிந்தனைச் சிற்பியாய்/
கூர்மிகு ஆயுதமாம் எழுதுகோலை விரும்பியே/
போராட்டக்   களத்தில் 
வேட்கையாய் அரிமாவொப்ப/
வாராத துன்பம் வந்திடினும் வாடாமலரே/

எடுத்த கொள்கையில் 
ஏற்றம் கண்டிட/
எண்ணிய காரியம் திண்ணமாய் அமைந்திட/
எழுச்சி மாநாடு பல கண்ட/
எங்கள் வைக்கம் வீரரை 
போற்றுகிறோமே/

சாதனைப் பெண்மணி கவிஞர் முனைவர் 
செ .ஆயிஷா 
காருண்யம் அறக்கட்டளை நிறுவனர்.
பல்லடம் .

 

​​​​​