குழந்தைகள் தின சிறப்பு கவிதை..!

குழந்தைகள் தின சிறப்பு கவிதை

குழந்தைகள் தின சிறப்பு கவிதை..!

துள்ளிடும் மான்கள்

இல்லத்தின் இனிமைகள்
இனித்திடும் கரும்புகள்
கள்ளம் இல்லாத
கலையான வரங்கள்

துன்பங்கள் போக்கிடும்
துள்ளிடும் மான்கள்
அன்பில் குறையாத
அட்சய பாத்திரங்கள்

பூக்களாய் பூத்திடும்
புன்னகை மலர்கள்
முட்கள் இல்லாத
முல்லைச் செடிகள்

சொற்கள் வீசாத
மழலைச்  பேச்சுக்கள்
சொர்க்கம் தரும்
சுகமான தருக்கள்

குடும்பத்தில் குழந்தைகள் 
மகிழ்ச்சியான
குதூகலங்கள் 
குறும்புகள் செய்வதில்
குறையில்லாத வல்லவர்கள்

- கிருஷ் அபி இலங்கை