சுதந்திர காற்றே சுவாசிப்போம் 9
சுதந்திரம்
சுதந்திர காற்றை சுவாசிப்போம்..
பல தியாகிகளின் மூச்சு காற்று நின்றதால் கிடைத்ததே சுதந்திரம் !
அடிமைப்படுத்திய அந்நியரை போராடி விரட்டியது சுதந்திரம் !
கொடுமைகள் பல சகித்துக்கொண்டு நாம் இன்பமாக வாழ முன்னோர்கள் பெற்று தந்ததே சுதந்திரம் !
நாம் கண்ணீர் விடாமல் இருக்க அவர்கள் கண்ணீர் சிந்தி சுதந்திரம் !
பல இழப்புகள் ஏற்பட்டாலும் இறுதிவரை ஒற்றுமையாக கைக்கொண்டு பெற்றதே சுதந்திரம் !
சுதந்திரம் கிடைத்தது உண்மைதான் ! எல்லோரும் சுதந்திரமாக வாழ்கிறார்களா என்பதுதான் கேள்விக்குறி !
கவிநிலவன்,
திருக்கோவிலூர்.
Comments (0)