பாரதியார் ...! 070
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
பாரதியார்
பாரதம் போற்றும் மகாகவியே//
உலகம் போற்றும் கவிதையின் மாமன்னனே//
மனதில் என்றும் அணையா விளக்கே//
வஞ்சமில்லா மனசுக்காரரே//
ரோஜா இதழைப் போல் மென்மையானவரே//
உங்களை நான் மறக்க முடியுமா//
இந்த நாட்டிற்காக பிறந்தவரே//
பெண் அடிமையை எதிர்த்தவரே//
பெண் விடுதலைக்காக வீர குரல் எழுப்பியவரே//
தமிழ்நாட்டு மீது பற்று கொண்டவரே//
தேன்கூட திகட்டும் உங்கள் கவிதைகள் திகட்டாது//
கவிதையின் சிம்ம சொப்பனமே//
நாட்டிற்காக வாழ்நாளை அர்ப்பணித்தவரே//
உங்கள் கவிதைகளை படிக்க படிக்க மனம் ஏங்கும்//
முறுக்கு மீசைக்காரர் என்றால் உங்கள் நினைவுதான்//
பூமியில் கவிதை படைத்தது போதும் என்று வானுலகம் சென்றாயோ//
நீங்கள் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதில் இன்னும் வாழ்கின்றீர்//
உங்கள் கவிதையில் தமிழின் கம்பீரம் தெரியும்//
உங்கள் படைப்புகள் மனதை வருடி செல்கிறது//
உங்கள் பாடல் ஒவ்வொன்றும் செவியில் மயக்கம் தரும்//
இந்த உலகில் என்றும் உங்கள் கவிதைகளும் பாடல்களும் மறையாது//
உங்கள் கவிதைகள் உணர்ச்சிப் பூர்வமானது//
- ஆ. அஜய்,
இளங்கலை முதலாம் ஆண்டு கணினி அறிவியல்
எஸ்.என்.எம்.வி கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர்
Comments (0)