காதல் ...! 012

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

காதல் ...! 012

காதல்

இரு உள்ளங்கள் ஒன்றாக சங்கமாகியே//
இமைகள் மூடி கனவிலும் ரசித்தே//
இனிமையான சொற்களில் பாகாய் உருகியே//
இனித்திடும் காதல் உணர்வுளால் எப்போதுமே// 

கண்கள் இரண்டும் சைககள்  செய்தே//
கண் மூடாது அழகை ரசித்தே//
கண்ணுக்குள் வைத்து அழகாய் கவனித்தே//
கண்கலும் பேசும் மௌன மொழிகளாலே//  

சின்ன சண்டைகளால் நெருக்கத்தை அதிகரித்தே//
சில்மிசம் செய்யுது அன்பை கூட்டியே//
சிதறும் எண்ணங்களை ஒன்றாக ஊட்டியே//
சிந்தையும் மறந்து மயக்கத்தில் விழுமே// 

புரியாமல் ஒன்று சேர்ந்த மனங்களோ//
புரிதலில் மூழ்கி போகும்  நொடிகளிலே//
புரியாத உணர்வுகளுக்குள் இழுத்திடும் நொடியாகுமே//
புதிர்களாய் சிலநேரம் தேடிடும் நொடிகளே// 

உலகின் அழகுகள் மங்கிடும் அவ்வேளையிலே//
உயிர்கள் இரண்டும் ஒன்றாகிடும் உணர்வுகளாலே//
உயிர் நாடி துடித்திடும் ஒருவருக்காகவே//
உயிரையே பரிசாக வழங்கிடும் அன்பாலே// 

புதிதாக பிறந்திட்டதாக அழகாய் தோன்றுமே//
புது யுகமாய் வாழ்வும் அமுதாகுமே//
புத்துயிர் பெற்று அன்பு மலர்ந்திடுமே//
புளிப்பும் கனி சுவையாகி காதலாகுமே// 


    - ஜஸூரா ஜலீல்