சுதந்திர காற்றை சுவாசிப்போம் 12

சுதந்திர தின கவிதை

சுதந்திர காற்றை சுவாசிப்போம் 12

சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்...

சுதந்திரத் தாயே
வேள்வித் தீயே
உன்னை மீட்டிடவே
தன்னுயிர் தியாகம் செய்திட்ட
வீரர்களின் எண்ணிக்கையோ
எண்ணிலடங்கா...

அகிம்சையும் போராட்டமும்
இரண்டறக் கலந்து தான்
களம் இறங்கினார்கள்.. 
இதோ இன்னுயிர் ஈந்த 
வீரர்களின் இரத்தத்துளிகளில்
புதிதாய் முளைக்கிறது 
சுதந்திர விருட்சம்... 

கூண்டில் அடைந்த பறவைபோலவே
அன்னிய பிடியினில் அடைந்திருந்தோம் அன்று... 
சிறகை விரிக்கும் பறவையென
சுதந்திரமாய் வான்நோக்கி 
பறக்கிறோம் இன்று... 
சுதந்திரக் காற்றினை
இனிதே சுவாசித்தப்படி.... 

கோ.ஶ்ரீஅஹிலேஷ்
கும்பகோணம்.