அறிஞர் அண்ணா 058
அறிஞர் அண்ணா அறிவிச்சுடர் விருது கவிதை போட்டி
அறிஞர் அண்ணா
தலைப்பு : காஞ்சியின் கதாநாயகன்
காஞ்சி கண்டெடுத்த முத்தான மனிதரே //
காவியம் படைத்த இலக்கிய வேந்தரே //
பெயரிலே உறவு கொண்ட புனிதரே //
முகத்திலே பொலிவு
காட்டிய புன்னகையாளரே //
தலைகளை எண்ணிய தலைவர்களுக்கு மத்தியில் //
இதயங்களை
எண்ணியவர் காஞ்சியின் கதாநாயகர் //
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு வகுத்தவர் //
கடைக்கோடி மக்களையும் கருத்தாய் பார்த்தவர்//
புகழைத் தேடி அலையக்கூடாது என்றவர் //
புகழினைத் தம்மை நெருங்கச் செய்தவர் //
தமிழ் நாடெனப் பெயரைத் தந்தவர் //
தமிழகத்தைத் தலைநிமிரச் செய்த சாணக்கியர் //
சாமானிய பிறப்பு சாதனை மரணம் //
சாலையில் நின்றதோ ஒன்றரைகோடி மக்கள் //
மண்ணில் மறைந்தாலும் வேறாக இருக்கின்றீரே //
இதயத்தில் என்றும் மாறாது நிற்கின்றீரே... //
கவிஞர்.வங்கனூர். த.சீனிவாசன்
Comments (0)