சுதந்திர வேள்வி வளர்த்தவன் ...! 021
தமிழ்ச் சுடர் விருது கவிதைப்போட்டி
சுதந்திர வேள்வி வளர்த்தவன்...!
பாரத தேசத்தின் விடுதலைக்கு
வேரதிர முழங்கியவன்!
வெள்ளையனெனும் கொள்ளையரை
ஊரதிர உலகறிய மிரட்டியவன்!
கடை விரித்து வணிகம் செய்ய இடம்பிடித்து வந்தோரை
மடைதிறந்த வெள்ளம்போல்
படைதிரட்டி விரட்டியவன்!கள்ளூறும் கவிதை கொண்டு தெள்ளிய சுதந்திர வேட்கையை உள்ளூரப் பாய்ச்சியவன்!
எட்டயபுரம் ஈன்றெடுத்த கவிஞனவன் கட்டபொம்மன் வீரம் கொண்டு எட்டுத் திக்கும் கோலோச்சியவன்!
சுதந்திர தாகம் என்னும் தாரகமந்திரத்தை வளர்த்தெடுக்க கவிவேள்வி செய்து நீர் பாய்ச்சியவன்!
-சுத்தமல்லி.முனைவர். வ. ஹரிஹரன்
திருநெல்வேலி
Comments (0)